Asianet News TamilAsianet News Tamil

இளம் பெண்ணை மாறி மாறி கற்பழித்த இளைஞர்கள்... போட்டோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்ட சோகம்!

இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று 4 பேர்  கூட்டாக மாறி மாறி கற்பழித்து அதை  புகைப்படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Young women Gang Raped in Hyderabad

ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர். நகரில் வசிக்கும் 28 வயதான சஞ்சனா என்ற இளம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் ராஜ் என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குண்டூருக்கு அழைத்துச் சென்று உள்ளார். நெருங்கிய உருவுக்காரரான  அவர் அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து வாங்கிக் கொடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கே தனது  நன்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை   கற்பழித்துள்ளனர்.  இந்த நிலையில் தன்னை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் ஆந்திர போலீசில் புகார் அளித்துள்ளார். பாலியல் பலாத்காரத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோ அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது என கூறியுள்ளார். 

இது குறித்து போலீஸார் கூறுகையில் இந்த பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்துள்ளது. அந்த பெண் அப்போது இதை போலீசில் புகாராக அளிக்காமல் விட்டுவிட்டார். ஆனால், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட ஆபாச போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளதால் தற்போது புகார் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஐதராபாத் மேற்குப் பகுதி துணை போலிஸ் கமிஷனர் கூறுகையில், "அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர். அப்போது,  எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படத்தை  இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு தெரிந்த ராஜ் என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் பொய் கூறி விட்டு தனது வீட்டிற்கு   அழைத்து சென்றுள்ளார். 

அங்கே அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து. அதன் பிறகு அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். பின்னர், அந்த பெண் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவரை ராஜ் உள்ளிட்ட நான்கு பேர் கூட்டாக மாறி மாறி  பாலியல் பலாத்காரம் செய்வதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், அவர்களிடமிருந்து தப்பிய அவர் பலாத்காரம் சம்பவத்தை வெளியில் சொல்ல பயந்துகொண்டு புகார் அளிக்கவில்லை, அவருடைய போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், கூட்டாக கற்பழித்து போட்டோக்களை வெளியிட்டுள்ளதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios