tution teacher affair for 10th class student

சண்டிகர் மாநிலம், ராம்தர்பார் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை உமா. 34 வயதாகும் இவர் அதே பகுதில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இவர் தன்னுடைய வீட்டின் அருகில் வசித்து வரும், 10 ஆம் வகுப்பு மாணவர், ஒருவருக்கும் அவருடைய தங்கைக்கும் தினமும் டியூசன் எடுத்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு வகுப்பு படித்து வருவதால் இருவருக்கும் தனித்தனியே பாடம் எடுப்பதாக கூறி, வெவ்வேறு நேரத்தில் பாடம் எடுத்து வந்துள்ளார். 

இருவருக்கும் தனித்தனியாக பாடம் எடுக்கும் தனிமையை பயன்படுத்தி, ஆசிரியை உமா... 10ஆம் வகுப்பு மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். மேலும் மாணவன் தன்னிடம் பேசுவதற்காக அவருக்கு தனி சிம் கார்டு ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவன் குறைவான மதிப்பெண் எதுத்ததால், பெற்றோர் வேறு ஒரு டியூசனில் சேர்க்க நினைத்தனர். அதற்கு ஆசிரியை உமா, கவனக்குறைவு காரணமாக மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டான். இனி இப்படி நடக்காது என்று கூறி மீண்டும் தன்னிடம் டியூசனுக்கு அனுப்பும்மாறு கூறியுள்ளார். 

ஆனால் மாணவனின் பெற்றோர் இதனை ஏற்க வில்லை. எனவே மாணவனுடன் அவனது பெற்றோரையும் உமா வீட்டிற்கு அழைத்துள்ளார். கணவரிடன் நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறி மாணவனை தனது வீட்டுக்குள் அழைத்து சென்று ஓர் அறைக்குள் வைத்து பூட்டிக்கொண்டார். 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தகராறில் ஈடுபட்டனர். இதனால் இந்த பிரச்சனையில் அக்கம் பக்கத்தினர் தலையிட்டு மாணவனை பத்திரமாக மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த பிரச்னையை விடாத ஆசிரியை உமா, மாணவனை தன்னுடன் அனுப்பவில்லை என்றால், உங்கள் வீட்டுக்குள் வந்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று கூறி, ஏதோ ஒரு மருந்தை தன்னுடைய வாயில் ஊற்றி மயக்கமடைந்தார். இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் இவரை மருத்துவ மனையில் அனுமதித்தனர் அங்கு உமாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.