பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 96 பேர் பலியாகினர்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ரயில்வே அமைச்சரும் உ.பி.அரசும் நிதியுதவி அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து, இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மீட்பு பணிகளில் உதவி புரிவதற்காக சதீஸ்கர் அரசு குழுவை அனுப்பியுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய அமைச்சர் சுரேஷ்; பிரபு அங்கேயே இருந்து புலன் விசாரணையை முடுக்கிவிடப்பபோவதாக அறிவித்துள்ளார்.
