Asianet News TamilAsianet News Tamil

வங்கிகள் இன்று இரவு 8 மணி வரை செயல்படும்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு !!

today banks are working upto 8 pm
today banks are working upto 8 pm
Author
First Published Mar 31, 2018, 6:20 AM IST


இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று இரவு 8 அணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி , நேற்று  புனிதவெள்ளி நாளை ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக உள்ளது..

ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதில்  பாதிப்பு உண்டாகும் என்பதால்,  இன்று  சனிக்கிழமை  இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று  இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios