Asianet News TamilAsianet News Tamil

ஆண் நண்பருடன் சுற்றித் திரிந்த 13 வயது சிறுமி! கொடூரமாக கொன்ற தந்தை!

The girl was raped by a boyfriend who was murdered by a 13-year-old girl
The girl was raped by a boyfriend who was murdered by a 13-year-old girl
Author
First Published Mar 12, 2018, 11:37 AM IST


தனது  13 வயது மகள் ஆண் நண்பருடன் சுற்றியதால் ஆத்திரமடைந்த அவரது தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியை சேர்ந்த 40 வயது சுதேஷ்குமார் என்பவர் தனது 13 மகளை காணவில்லை என காரவால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமி கடத்தப்பட்டதாக புகாரை பதிவு செய்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று சிறுமியின் உடலை அவரது தந்தை சுமார் 10 கிலோ மீட்டர் தொலையிலுள்ள காஜியாபாத்தின் டுரோனிகா சிட்டியின் லோனி பகுதி கழிவுநீர் கால்வாயில் இருந்து எடுத்தனர். இந்த விஷயத்தை போலீசுக்கு தெரிவித்துவிட்டு அடக்கம் செய்வதற்காக சிறுமியின் உடலுக்கு சடங்குகள் செய்தார். ஆனால், போலீசாரின் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருப்பவரை ஒவ்வொருவராக விசாரணை நடத்திவந்தனர்.

இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணமாக தகவல் அளித்தார். தொடர்ந்து நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் விசாரணையில் தனது மகளை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இதுபற்றி  விசாரணையில்,  கொலை செய்யப்பட்ட சிறுமியை அவரது தந்தை சுதேஷ்குமார், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த 2 தினங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து அழைத்து சென்றுள்ளார். இது அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அப்போது குமார் ஹெல்மெட் அணிந்து சென்றார். சிசிடிவியில் பதிவாகியுள்ள ஹெல்மெட்டு, அவரது வீட்டில் உள்ள ஹெல்மெட்டுடன் ஒத்துபோனது. எனவே, சிறுமிக்கு அவரது குடும்பத்தார் சடங்குகள் செய்யும் வரை காத்திருந்து அதன் பின் கடந்த சனிக்கிழமையன்று குமாரை கைது செய்தோம்.

விசாரணையில் அவரது தந்தை கூறியதாவது; கடந்த ஓராண்டுக்கு முன்பு, பக்கத்தில் மொபைல் கடை வைத்திருக்கும் ஒருவடன் தனது மகளை அபேஷ்குமார் பார்த்துள்ளார். அதனை கண்டித்ததோடு, அந்த நபரை மேற்கொண்டு பார்க்க செல்ல கூடாது என எச்சரித்துள்ளார்.

 ஆனால், பலமுறை எச்சரித்தும் சிறுமி அந்த நபரை சந்தித்து வந்துள்ளார். எனவே, அந்த நபருக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். இதற்காக கடந்த வியாழன்று கடைக்கு சென்று இனிப்பு(மோமோஸ்) வாங்கி வருவதாக கூறிவிட்டு சிறுமி வெளியில் சென்றுள்ளார். ஆனால், அந்த நபரைத்தான் பார்க்க செல்கிறார் என சந்தேகமடைந்த அபேஷ்குமார், கையில் கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு மகளை பின்தொடர்ந்து சென்றார். அப்போது தனது மகள் அந்த நபருடன் சென்று பேசுவதை பார்த்தார். சிறுமியின் தந்தையை பார்த்த அந்த நபர் சிறுமியை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அதன்பின் தனது பைக்கில் பின்னால் மகளை அமர வைத்துக்கொண்டு டுரோனிகா சிட்டி பகுதியின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியான தனது மகளின் கழுத்தை கத்தியால் பலமுறை அறுத்து கொடூரமாக கொலை செய்தார் அபேஷ் குமார். அதோடு மகளின் முகத்திலும் தாக்கியுள்ளார். அதன்பின் மகளின் உடலை வீசிவிட்டு ரத்தக்கறை படிந்த தனது உடை மற்றும் கத்தியையும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் எறிந்தபின்னர் வீட்டு திரும்பிச்சென்றதாக கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios