Asianet News TamilAsianet News Tamil

பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க ஒரே நேரத்தில் 2 வயாகரா போட்டு ரெடியாக இருந்த 41 வயது நபருக்கு நேர்ந்த சோகம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க 41 வயது நபர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய வயாகரா மாத்திரை ஒரே நேரத்தில் இரண்டை எடுத்துள்ளார். 

Taking 2 Viagra Pills with Alcohol..Nagpur Man Dies
Author
First Published Mar 8, 2023, 1:00 PM IST

ரூமில் தனியாக இருந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஒரே நேரத்தில்  2 வயாகரா மாத்திரை எடுத்துக்கொண்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க 41 வயது நபர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய வயாகரா மாத்திரை ஒரே நேரத்தில் இரண்டை எடுத்துள்ளார். அதுகூடவே மதுவையும் குடித்துள்ளார். அப்போது, அந்த நபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- ஓயாமல் டார்ச்சர்! உல்லாசத்தின் போது ஆண் உறுப்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கள்ளக்காதலி? இறுதியில் நடந்த சோகம்

Taking 2 Viagra Pills with Alcohol..Nagpur Man Dies

இதையடுத்து அவரது பெண் தோழி உடனே மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர் செல்ல மறுத்துவிட்டார். சிறிது நேரத்தில் மயங்கிய அவரை தோழி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  ஒரே நேரத்தில் 3 பேருடன் இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி டார்ச்சர்! கதறிய மனைவி! எஸ்கேப்பான வயாகரா கணவர்.!

Taking 2 Viagra Pills with Alcohol..Nagpur Man Dies

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும் போது, ​​​​செரிப்ரோவாஸ்குலர் ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios