Asianet News TamilAsianet News Tamil

சேகர் ரெட்டிக்கு பதில் சுதா நாராயணமூர்த்தி.. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவியேற்றார்

sudha narayanamurthy-appointed-as-dhevasthana-member
Author
First Published Feb 20, 2017, 3:21 PM IST


திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பிரபல சமூக சேவகியும், இன்போசிஸ் நிறுவன தலைவருமான சுதா நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் சேகர் ரெட்டியின் வீட்டில் நகை, முக்கிய ஆவயங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

sudha narayanamurthy-appointed-as-dhevasthana-member

இதனையடுத்து சேகர்ரெட்டியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து, ஆந்திர மாநில அரசு அதிரடியாக நீக்கியது.

இந்நிலையில் சேகர் ரெட்டிக்குப் பதிலாக சமூக சேவகியும், இன்போசிஸ் நிறுவன தலைவருமான சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர மாநில அரசு நியமனம் செய்துள்ளது.

sudha narayanamurthy-appointed-as-dhevasthana-member

இதனையடுத்து சுதா நாராயணமூர்த்தி,  திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் பதவியேற்றுக் கொண்டார்.

sudha narayanamurthy-appointed-as-dhevasthana-member

இதனைத் தொடர்ந்து  சுதாநாராயணமூர்த்தி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பக்தர்களின் அன்னதானத்திட்டத்துக்கு காய்கறிகள், அரிசி போன்றவற்றை சுதா நாராயணமூர்த்தி  காணிக்கையாக வழங்கினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios