மகாராஷ்டிராவில் 2000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. தமிழ்நாடு, டெல்லியிலும் உக்கிரம்.. மாநில வாரியாக முழு விவரம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9300ஐ கடந்துவிட்டது. 10 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ கடந்துவிட்ட நிலையில், மாநில வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
உலகளவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பாதிப்பு கடுமையாக உள்ளது.
மிகச்சாதாரணமாக தொடங்கிய கொரோனா பாதிப்பு, இந்தியாவில் கடந்த சில தினங்களாக தாறுமாறாக உயர்ந்துவருகிறது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறுவதற்குள், முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் இன்னும் சமூக தொற்றாக மாறவில்லை. நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படவுள்ளது.
ஆனாலும் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்மை தகவலின்படி, மகாராஷ்டிராவில் 2064 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக 2000ஐ கடந்துள்ளது மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடும் டெல்லியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் 1154 பேருக்கும் தமிழ்நாட்டில் 1075 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
மகாராஷ்டிரா - 2064
டெல்லி - 1154
தமிழ்நாடு - 1075
ராஜஸ்தான் - 815
உத்தர பிரதேசம் - 483
தெலுங்கானா - 504
மத்திய பிரதேசம் - 564
கேரளா - 376
ஜம்மு காஷ்மீர் - 245
லடாக் - 15
கர்நாடகா - 247
ஹரியானா - 185
குஜராத் - 538
ஆந்திரா - 427
பஞ்சாப் - 170
மேற்கு வங்கம் - 152
உத்தரகண்ட் - 35
ஹிமாச்சல பிரதேசம் - 32
சத்தீஸ்கர் - 31
சண்டிகர் - 21
பீகார் - 64
ஒடிசா - 54
புதுச்சேரி - 7
கோவா- 7
அந்தமான் நிகோபார் - 11
அசாம் - 30
ஜார்கண்ட் - 19.