பன்முகத்தன்மை கொண்டவர் சோ - மோடி புகழாரம்
மறைந்த பத்திரிக்கையாளர் சோவுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சோ பன்முகத்தன்மை கொண்டவர் என்றும் சிறந்த அரசியல்வாதி என்றும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதே போன்று சிறந்த தேசியவாதியான சோவை இந்திய நாடு இழந்து தவிக்கிறது என பாஜக தலைவர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ளார்.