Asianet News TamilAsianet News Tamil

‘இந்தியா’ – பாகிஸ்தான் எல்லைக்கு சீல்..!! - 2018 வரை தீவிர கண்காணிப்பு : ராஜ்நாத் சிங்

seal for-india-pakistan-border-says-rajnath-singh
Author
First Published Oct 8, 2016, 6:05 AM IST


இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவதால் எல்லை பகுதிகளில்  சீல் வைத்து கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதனால் இந்திய எல்லையில் பதற்றம் நிலவுவதால் எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

seal for-india-pakistan-border-says-rajnath-singh

தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் இந்த முயற்சிக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய 4 மாநில முதலமைக்ச்சர்களுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் வருகின்ற 2018-ம் ஆண்டு வரை எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், பாகிஸ்தான் நாட்டுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையும் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,   நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios