சபரிமலை விரதம் தொடங்கியது – பக்தர்கள் மாலை அணிந்தனர்
கார்த்திகை முதல் தேதியான இன்று, ஐயப்ப பக்தர்கள், சபரிமலைக்கு செல்ல பல்வேறு கோயில்களில் அதிகாலையிலேயே மாலை அணிந்து கொண்டனர்.
ஐயப்பனுக்கு ஆண்டு தோறும் மாலை அணிந்து, 48 நாள் விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், சபரிமலைக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து வருவார்கள்.
இதையொட்டி கார்த்திகை 1ம் தேதியான இன்று பல்வேறு கோயில்களில் பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். இன்று முதல் ஒரு வேளை உணவை சாப்பிட்டு 48 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு செல்ல தயாராகிவிட்டனர்.