Road accident panality increased

ஒரு நாட்டின் வளர்ச்சியில் போக்குவரத்து என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெருகி வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை கட்டமைப்பால் மாற்றங்கள் செய்தபோது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. இதற்கு முக்கிய காரணங்கள் நாம் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காததும், வாகன பராமரிப்பின்மையுமே ஆகும். மேலும், பருவகால மாற்றம் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் இயக்க முற்படுவதும் காரணமாகிறது

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுதல் இவை இரண்டுமே கவனத்தினை சிதைப்பதால் கவனம் முழுவதும் சாலையில் இருப்பதில்லை. அதிக வேகம், கவனக்குறைவும் பெரும்பாலான சாலை விபத்துக்கு காரணங்களாகின்றன.

இதற்காக மத்திய அரசு விபத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு வழக்கும் இழப்பீட்டின் அளவை அதிகரிக்கும் சட்ட்திருத்தத்தை கொண்டுவரவுள்ளது. இதன்படி பழைய இழப்பீட்டுக்கு தொகையை பத்துமடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்

எனவே, சாலையில் ஏற்படும் விபத்தினை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடடிக்கைகள் எடுத்தாலும் சாலையை உபயோகிப்பவர்களாகிய தனி மனிதர்களின் சாலை ஓட்டும் முறை மட்டுமே பாதுகாப்பான பயணத்தை உறுதிய்செய்ய முடியும்