அபாயோப் புயானின் UNTOLD என்ற பாட்காஸ்டில் பங்கேற்று, அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் ரீனிமா போரா.

அபாயோப் புயானின் UNTOLD பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிர்ச்சியூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சில விஷயங்கள் பற்றி பேசியுள்ளார், புதிதாக முடிசூட்டப்பட்ட திருமதி. இந்தியா கேலக்ஸி 2024, ரீனிமா போரா. 'லவ் ஜிகாத்' செயல்பட்டால் தான் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அஸ்ஸாமைச் சேர்ந்த ரீனிமா, தனது படிப்பைத் தொடர 16 வயதில் பெங்களூருக்குச் சென்றபோது ஒரு முஸ்லிம் சிறுவனுடனான தனது உறவின் கொடூரங்களை விவரித்தார். தனது உணர்ச்சிப்பூர்வமான விவரிப்பில், தான் ஒரு நச்சுத்தன்மையான, கட்டுப்படுத்தும் உறவில் இருந்த தனது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரால் தான் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

"கடந்த 16 ஆண்டுகளாக அடக்குமுறையின் அதிர்ச்சியை நான் அனுபவித்து வருகிறேன். அதை மறக்க எனக்கு பல ஆண்டுகள் ஆகும். அந்த நாட்கள் இப்போது முடிந்துவிட்டன என்று சொல்லி நான் தினமும் என்னைத் தெற்றிவருகிறேன். இன்றுவரை, சிலர் அது என்னுடைய தவறு என்று சொல்கிறார்கள், அதை நினைத்து நான் இன்றும் வேதனைப்படுகிறேன். 16 வயதில் படிக்க அஸ்ஸாமில் இருந்து பெங்களூருக்குச் சென்றேன். அங்கு எனது முதல் உறவு ஒரு முஸ்லிம் சிறுவனுடன் தான் இருந்தது. என் பெற்றோரைப் போலவே, அவர் என் நன்மைக்காகத் தான் அனைத்தையும் செய்கிறார் என்று நினைத்தேன்" என்று ரீனிமா போரா நினைவு கூர்ந்தார்.

அயோத்தியில் அருள்புரியும் 3D ராமர்! யோகி அரசின் பலே பிளான்!!

"சில சமயங்களில் அவர் என்னை நடத்திய விதத்திற்காக நான் அவரை தாலிபான் என்று அழைப்பேன். அவர் என்னை மிருகத்தனமாக அடிப்பார். நான் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி சாப்பிட வைத்த நாளை நான் மறக்கவே மாட்டேன். அவரது பெற்றோர் என்னை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தினர். ஆம், இது கிட்டத்தட்ட "லவ் ஜிகாத் தான்," என்று அவர் மேலும் கூறினார். 

இந்த விஷயத்தை விட அதிகமாக, தனது அடையாளத்தை மேலும் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக தனது பெயர் ரீனிமா போரா என்பதிலிருந்து ஆயிஷா ஹுசைன் என்று மாற்றப்பட்டதாக ரீனிமா தெரிவித்தார். "அவர்கள் என்னை நமாஸ் செய்யவும் வைத்தார்கள்," என்று அவர் கூறினார், தனது விருப்பத்திற்கு மாறாக மத சடங்குகளைச் செய்ய எப்படி வற்புறுத்தப்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தார் அவர்.

தனது முன்னாள் காதலன், தன்னை விட்டுச் சென்றால், தன் மீது அமிலம் வீசுவேன் என்று மிரட்டியபோது, அவர்களின் அடக்குமுறை ஒரு ஆபத்தான திருப்பத்தை நோக்கி சென்றது. பயங்கரமான மிரட்டல்கள் மற்றும் கொடுமைகள் இருந்தபோதிலும், ரீனிமா இறுதியில் அந்த உறவிலிருந்து விடுபட்டு தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளார். 

YouTube video player

இன்று, ரீனிமா துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிப்பிழைத்தவர் மட்டுமல்ல, அதிகாரமளித்தல் மற்றும் மீள்தன்மைக்கான ஒரு கலங்கரை விளக்கமாகவும் உள்ளார். பல ஆண்டுகளாக அதிர்ச்சியுடன் போராடிய பிறகு, இதே போன்ற போராட்டங்களை எதிர்கொண்ட பல பெண்களுக்கு நம்பிக்கையின் சின்னமாக அவர் உருவெடுத்துள்ளார். திருமதி. இந்தியா கேலக்ஸி 2024ல் அவரது வெற்றி அவரது வலிமை, உறுதிப்பாடு மற்றும் சிரமங்களை கடக்கும் தைரியத்திற்கு ஒரு சான்றாகும்.

"திருமதி. இந்தியா கேலக்ஸி 2024 ஆக முடிசூட்டப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று ரீனிமா தனது முடிசூட்டலைத் தொடர்ந்து கூறினார். "இந்த பட்டம் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல; இது பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுவதற்கும் மற்றவர்கள் தங்கள் கனவுகளைப் பின்பற்ற ஊக்குவிப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த தளமாகும். திருமதி. கேலக்ஸியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நமது அழகான கலாச்சாரத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் நான் ஆர்வமாக இருக்கிறேன்."

திருமதி இந்தியா இன்க் தேசிய இயக்குநர் மோகினி ஷர்மா பேசுகையில், "ரினிமாவின் தைரியத்தை பாராட்டினார், "ரினிமா பெற்ற இந்த கிரீடமான, மிஸஸ் இந்தியா இன்க் மூலம், திருமணமான பெண்களின் நம்பமுடியாத பயணங்களைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண்கள் தங்கள் மீதான அடக்குமுறையில் அடியோடு அழித்து மீண்டு வரவேண்டும் என்றும் நினைக்கிறோம்" என்றார். 

4 மாதங்களில் 3 தேசிய விருதுகள்! நீர் மேலாண்மையில் சாதனை படைத்த யோகி அரசு!