reveived duplicate 2000 rs note from bank in delhi
எப்படி தான் ..இது நடக்கிறதுன்னு நமக்கு தெரியவே மாட்டேன்தே..என பலரும் யோசிக்க வைக்கும் செயலில் ஒன்று தான் தற்போது ஏடிஎம் மெஷினில் வெளிவந்துள்ள போலி இரண்டாயிரம் ரூபாய்
விவரம் :
டெல்லியில் உள்ள ஜாமியா நகர் பகுதியில், DCP வங்கியின் ஏ.டி.எம் மையம் உல்ளது. இந்த ஏடிஎம் மையத்தில்,அதே பகுதியில் வசிக்கும் சௌத்ரி என்பவர், ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம்.மில் போலியான இரண்டாயிரம் ரூபாய் வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்,அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் என்ன அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யம் என்றால்,
அதில், பாதி கிழிந்து அதனுடன் மீதி வெற்று காகிதம் ஒட்டப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது.போலி ரூபாய் நோட்டு என்றால், அதே கலரில் இருந்தாலும் சரி ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்று நினைக்கலாம்.ஆனால் பாதி ரூபாயே வெள்ளை காகிதம் என்றால் எப்படி இருக்கும் ....
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
