2008 மும்பை தாக்குதலின் போது தாஜ் ஹோட்டலில் சிக்கியிருந்த முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டன் ரவி தர்னிதிர்கா, தனது ராணுவ அனுபவத்தைப் பயன்படுத்தி 157 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினார்.

2008 நவம்பர் 26 மும்பை நகரின் இரவு நரகமாக மாறிய தினம். திடீரென நடந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதத் தாக்குதல் நான்கு நாட்கள் நீடித்து 12 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டது. 159 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் கடுமையாக காயமடைந்தனர். அந்த தாக்குதலின் மையமாக மாறிய இடம் தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மறைந்திருந்த ஹீரோ ரவி தர்னிதிர்கா

அமெரிக்க கடற்படை முன்னாள் கேப்டனான ரவி தர்னிதிர்கா, ஈராக் போரில் 200-க்கும் மேற்பட்ட ராணுவ விமானப் பணிகள் மேற்கொண்டவர். அந்த நேரத்தில், அவர் ஒரு சாதாரண விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் மும்பை வந்திருந்தார். அன்று இரவு அவர், தனது குடும்பத்துடன் தாஜ் ஹோட்டலின் 20வது மாடியில் இருந்து "சூக்" என்ற உணவகத்தில் இருந்தார். ஆனால் சில நிமிடங்களில், அவர்கள் ஒரு போர் நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.

ரவியின் முடிவு உறுதி

தாக்குதல் தொடங்கியது. ரவி உடனடியாக சூழ்நிலையை புரிந்துகொண்டார். அருகில் இருந்த தென்னாப்பிரிக்க முன்னாள் கமாண்டோக்கள் குழுவுடன் இணைந்து செயல்திட்டம் தீட்டினார். உணவகத்தின் கண்ணாடி கதவுகள் ஆபத்தானவை என சுட்டிக்காட்டி, அனைத்து விருந்தினர்களையும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு செய்தார்.

தற்காலிக ஆயுதங்கள்

அவர்கள் விருந்தினர்களை சமையலறை வழியாக ரகசியமாக அழைத்துச் சென்றனர். கத்தி, இரும்புக் கம்பி, மேசை கால்கள் கிடைத்ததை எல்லாம் பாதுகாப்பு ஆயுதங்களாக மாற்றினர். அவை பயங்கரவாதிகளின் AK-47-க்கு சமம் அல்ல. ஆனால் ஓர் எதிர்ப்பும் செய்யாமல் சிக்கிக் கொள்வதைவிட இதுவே சிறந்தது என ரவி நம்பினார்.

இருட்டடைந்த மண்டபத்தில் அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி, படிக்கட்டுகள் வழியாக தப்பித்தார். 84 வயது முதிய பெண் ஒரு படிகட்டுகளைக் கடக்க முடியாமல் தவித்தார். “என்னை விட்டுச் செல்லுங்கள்” என்ற அவர் வேண்டுகோளை ரவி மறுத்தார். அவரை தூக்கிக் கொண்டு இறங்கி வந்தார்.

157 உயிர்கள்

பல மணி நேர பயமும், தீப்பிடித்த ஹோட்டலின் ரிசுக்கும் நடுவே, 157 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர். அதற்காக காரணங்களில் மிகப் பெரியது ரவி தர்னிதிர்காவின் அமைதியான முடிவு, ராணுவ அனுபவம் மற்றும் மனிதத்தன்மை ஆகும்.