Asianet News TamilAsianet News Tamil

பந்தல் சரிந்து விபத்து... உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு..!

ராஜஸ்தானில் பலத்த காற்று காரணமாக பந்தல் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

Rajasthan Barmer pandal collapse...Death toll rises to 15
Author
Rajasthan, First Published Jun 24, 2019, 3:38 PM IST

ராஜஸ்தானில் பலத்த காற்று காரணமாக பந்தல் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.  

ராஜஸ்தான் மாநிலம் பாமர் மாவட்டத்தில் உள்ள ஜசோல் பகுதியில், ‘ராம் கதா’ என்ற ஆன்மிக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  Rajasthan Barmer pandal collapse...Death toll rises to 15

அப்போது, திடீரென பலத்த காற்று வீசியது. இதில் இரும்புத் தூண்கள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Rajasthan Barmer pandal collapse...Death toll rises to 15

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் 5 லட்சம் நிதிஉதவி அறிவித்துள்ளார். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios