இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு பிரதமர் மோடி இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு, நமது இளைஞர்களின் அதிகரித்து வரும் புதுமையான ஆர்வத்தை நிரூபிக்கிறது எனவும், இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரதமர் மோடி ஆட்சியின் கடந்த 9 ஆண்டுகளில், திறன் மேம்பாட்டுக்காக பல பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் இந்தியா புதுமைகளின் மையமாக மாறும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் பிற வகையான அறிவுசார் சொத்து தொடர்பான கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதை அரசாங்கத்தால் பகிரப்பட்ட தரவு காட்டுகிறது. தற்போது சீனா உள்ளிட்ட பல நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது, ஆனால், இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை காணும்போது, விரைவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எழுகிறது.

Scroll to load tweet…

உலக அறிவுசார் சொத்துரிமை (WIPO) அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில், சீனா அதிக காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளது. காப்புரிமை அடிப்படையில் இந்தியா உலகளவில் 10ஆவது இடத்திலும், வர்த்தக முத்திரைகள் அடிப்படையில் 8ஆவது இடத்திலும் உள்ளது.

உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாட்டுக்கு குறைவான வரி பங்கீடு!

காப்புரிமைச் சட்டம் 1970 மற்றும் காப்புரிமை விதிகள் 2023 ஆகியவை இந்தியாவில் காப்புரிமைகளுக்கான அமைப்புகளாகும். காப்புரிமை விண்ணப்பங்களைச் செயலாக்குதல், மறுஆய்வு செய்தல், ரத்து செய்தல் ஆகியவற்றில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள விதிகளின் காரணமாக வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரமாக இருந்தது, ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் அது 80 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.