கடும் வெயில் காரணமாக ஒடிஷா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பள்ளிகள் அனைத்தும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. 

இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளிவிற்கு ஏப்ரல் மாதத்தில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் முழுக்க முழுக்க சராசரியாக 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரையிலான் வெப்பம் பதிவாகியுள்ளது. மே மாதம்‌ தொடங்கியுள்ள நிலையில்‌, கடந்த ஏப்ரல்‌ மாதத்தில்‌ அதிகபடியான சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது. 

மேலும் ராஜஸ்தான்‌, மத்திய பிரதேசம்‌, மகாராஷ்டிரத்தின்‌ விதர்பா பகுதிகளில்‌ அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின்‌ தாக்கம்‌ அதிகமாக இருக்கும்‌ என்று இந்திய வானிலை ஆய்வு மையம்‌ அறிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 - 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியா மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலையாக ஏபரல் மாதத்தில் மட்டுமே 35.9 டிகிரி செல்சியஸ்‌ முதல்‌ 37.78 டிகிரி செல்சியஸ்‌ வரை சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. எனவே மே மாதத்தில் வெப்பநிலை இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. நாட்டின்‌ வடமேற்குப்‌ பகுதியில்‌ கடந்த 2010ஆம்‌ ஆண்டு 35.4 டிகிரி செல்சியஸ்‌ சராசரி வெப்பநிலை பதிவானது. அதற்கு முன்பு 1973ஆம்‌ ஆண்டு 37.75 டிகிரி செல்சியஸ்‌ சராசரி வெப்பநிலை பதிவானது. 

அதன் பின்னர் தற்போது அதை விட அதிகளவும் இதுவரை இல்லாத வகையில் பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றம் விளைவாக அதிக மழைபொலிவு, அதிக வெப்பநிலை உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல்‌ 9 மணி வரை மட்டுமே மாணவர்களுக்கு பாடம்‌ நடத்துவதற்காக பள்ளிகள்‌ செயல்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நடைமுறை ஒடிசா மாநிலத்தில்‌ இன்று முதல்‌ அமலுக்கு வந்தது. ஆனால் தேர்வுகள்‌ அனைத்தும்‌ குறிப்பிட்ட தேதிகளில்‌ நடைபெறும்‌ என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.