டெல்லியில் இருக்கும் நைஜீரியவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆகவும் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆகவும் உயர்ந்துள்ளது. 

டெல்லியில் இருக்கும் நைஜீரியவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆகவும் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆகவும் உயர்ந்துள்ளது. டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் வெளிநாட்டுப் பயணங்கள் ஏதும் செல்லாத போதிலும் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: ம.பி. தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து… 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

நைஜீரிய நாட்டவர் டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் LNJP மருத்துவமனையில், நோடல் மருத்துவமனை, நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து நாட்களாக அவருக்கு கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் இருந்தது. அவரது மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) அனுப்பப்பட்டன.

இதையும் படிங்க: கேரள இளைஞர் குரங்கு அம்மையால் தான் உயிரிழந்தார்… உறுதிப்படுத்தியது மருத்துவ அறிக்கை!!

இன்று மாலை வந்த அறிக்கையில் அவருக்கு குரங்கு அம்மை இருப்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இரண்டு சந்தேகத்திற்கிடமான நோயாளிகளும் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை, 20 வயதுடைய நோய் அறிகுறிகளுடன் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.