நள்ளிரவில் திறந்துவிடப்பட்ட முல்லைப் பெரியாறு அணை…. அலறி அடித்து ஓடிய பொது மக்கள்….
நள்ளிரவில் திறந்துவிடப்பட்ட முல்லைப் பெரியாறு அணை…. அலறி அடித்து ஓடிய பொது மக்கள்….
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்பினால் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு 35 ஆயிரம் கனநீர் வந்து கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவலை 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். இப்போது அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு உயர்ந்துள்ளது. ஆனால் கனமழை காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையைத் திறநது விடுவது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு முல்லைப் பெரியாறு அணை திறந்துவிடப்பட்டது. விநாரக்கு 4500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தற்போது இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பெரியாற்றங்கரையோர மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர், ஒரு சிலர் தற்போது வீடுகளை காலி செய்து வருகின்றனர்