முகேஷ் அம்பானி மகளுக்கு இன்று இத்தாலியில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?
இத்தாலியில் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கும், பிரமால் மருந்துக்கம்பெனி நிறுவன உரிமையாளர் மகனுக்கும் இடயே இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கும், பிரமால் மருந்துக்கம்பெனி நிறுவன உரிமையாளர் மகனுக்கும் இடயே இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் இஷா அம்பானியின் சகோதரர் ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இரட்டையர்களில் இளையவரான இஷா அம்பானிக்கும் இப்போது நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரமால் நிறுவனத்தின் அதிபரான ஆனந்த் பிராமலும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள், நண்பர்கள். இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் தங்கள் பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.
ஹார்வார்டு பல்கலையில் எம்பிஏ முடித்த ஆனந்த் பிராமல் மருந்து நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இஷா அம்பானி ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்திருக்கிறார். இருவரும் நண்பர்களாகப் பழகிவந்த நிலையில், கடந்த மே மாதம் ஆனந்த் பிரமால் தனது காதலை இஷா அம்பானியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இப்போது இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.
இத்தாலியில் உள்ள லேக்கோமோ என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில், இந்த நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளது. இதில் விருந்தினர்களுக்குப் பிரம்மாண்டமான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு விருந்தில் நடன நிகழ்ச்சிகள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் இத்தாலியில் உள்ள லேக்கோமோ உள்ள வில்லா பால்பினோவில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.