Asianet News TamilAsianet News Tamil

மாயமான நேபாள விமானம் கண்டுபிடிப்பு... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் காண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

missing nepal plane with 22 people on board has been found
Author
Nepal, First Published May 29, 2022, 6:02 PM IST

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் காண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் இன்று காலை 9.55 மணிக்கு நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமாகியுள்ளது. ட்வின் ஓட்டர் 9N-AET விமானத்தில் நான்கு இந்தியர்கள் (மும்பையைச் சேர்ந்தவர்கள்) தவிர, இரண்டு ஜேர்மனியர்கள் மற்றும் 13 நேபாள பயணிகள் இருந்தனர் என்று ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேற்கு மலைப் பகுதியில் உள்ள ஜோம்சம் விமான நிலையத்தில் காலை 10:15 மணிக்கு விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டது. போக்ரா-ஜோம்சம் விமானப் பாதையில் கோரேபானிக்கு மேலே வானத்தில் இருந்து விமானம் கோபுரத்துடன் தொடர்பை இழந்ததாக விமான வட்டாரங்கள் தெரிவித்தன.

missing nepal plane with 22 people on board has been found

ஜோம்சோம் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் கூற்றுப்படி, ஜோம்சோமின் காசாவில் ஒரு பெரிய சத்தம் பற்றி உறுதிப்படுத்தப்படாத அறிக்கை உள்ளது. காணாமல் போன விமானங்களைத் தேடுவதற்காக நேபாள அரசாங்கம் முஸ்டாங் மற்றும் பொக்காராவிலிருந்து இரண்டு தனியார் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரை வழி வழியாக தேடுதல் பணியை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்பேரில், காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் நேபாள அரசானது, 2 ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாகவும், ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரைவழி வழியாக தேடுதல் பணியில் ஈடுபட்டது.

missing nepal plane with 22 people on board has been found

ஆனால், மோசமான வானிலை தேடுதல் நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தது.  இந்த நிலையில் கோவாங் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல் ஏதும் தெரியவிலை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து கண்டறியும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகமானது, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது என 977-9851107021 என்ற அவசர தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios