Asianet News TamilAsianet News Tamil

ஒரு வழியாக கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட முதல்வர்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தொண்டர்கள்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

madhya pradesh CM Shivraj Singh Chouhan discharged
Author
Madhya Pradesh, First Published Aug 5, 2020, 11:16 AM IST

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடந்த 25ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திகொண்ட அவர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி  போபாலில் உள்ள சிராயூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

madhya pradesh CM Shivraj Singh Chouhan discharged

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நேற்று முன்தினம் 2ம் கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இந்த பரிசோதனை முடிவிலும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

madhya pradesh CM Shivraj Singh Chouhan discharged

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்ட போது நெகடிவ் என வந்துள்ளது. இதனையடுத்து, அவர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். ஆனால், குணமடைந்த நிலையில் வீட்டில் 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளமாறு சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios