மெட்ரோ ரயிலில் கட்டிபிடித்த ஜோடிக்கு அடி உதை
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சாந்தினியிலிருந்து டம்டம் செல்லும் மெட்ரோ ரயிலில் இளம் ஜோடிகள் கட்டிப்பிடித்ததால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் பொது இடத்த்தில் அநாகரிகமாக நடந்ததாக கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களை அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என டம் டம் ரயில்நிலையத்தின் முன் ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர். பிறரை எந்த வகையிலும் காயப்படுத்தாமால் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமையில்லையா என மாணவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.