Asianet News TamilAsianet News Tamil

லாரியும் காரும் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி பலி..!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள மங்கான் பகுதியில் எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கியது.

lorry car collided head-on... 9 people killed in Mumbai
Author
First Published Jan 19, 2023, 9:31 AM IST

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள மங்கான் பகுதியில் எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த  கோர விபத்தில் 4 பெண்கள் உள்பட 9 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். , 4 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

lorry car collided head-on... 9 people killed in Mumbai

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தத 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

lorry car collided head-on... 9 people killed in Mumbai

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதிகாலையில் பனிமூட்டம் விபத்து நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios