கேரளாவில், தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவ மழையால், வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

கேரளாவில், தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவ மழையால், வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு எற்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி, 380 கும் மேற்பட்டவர்கள் உயிர் பலி ஆனார்கள். நிலச்சரிவில் சிக்கி பெரும்பாலோனோர் மாயமாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள வீடுகள் சேதமானது.மரங்கள் அடியோடு சாய்ந்தன. 

கேரளாவின் நிலைமையை உணர்ந்து, பல மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியது. இந்நிலையில் கேரளா மாநில மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஓணம் பண்டிகை நாளை வர உள்ளது. இந்த ஆண்டு ஓணம் கொண்டாட மக்கள் நல்ல மனநிலையில் இல்லை என்றே கூறலாம்.

வீடு உடைமைகளை இழந்து தவிக்கும் கேரள மக்கள் தவித்து வரும் நிலையில், ஓணம் பண்டிகையை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் கொண்டாட வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார் 

பழம் பெரும் விழாவான ஓணம் பண்டிகை ஓவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் அவர்கள் வடிக்கும் இடத்திலேயே கோலாகலமாக கொண்டாடுவார்கள்.