கொரோனா பரவல் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் திரையரங்குகள், மதுபான விடுதிகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம்.

கொரோனா பரவல் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் திரையரங்குகள், மதுபான விடுதிகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் போது விதிக்கபப்ட்ட ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரையில் அத்தியாசியமற்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்து வருகின்றன. அந்தவகையில் கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

கர்நாடாகாவில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்கள் வருகையுடன் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், திரையரங்குகள், மதுபானிய விடுதிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலித்த கர்நாடக அரசு, அக்டோபர் 1-ம்தேதிமுதல்கொரோனாபாதிப்பு 1 சதவீதத்துக்கும்குறைவாகஉள்ளமாவட்டங்களில்திரையரங்கங்கள் 100 சதவீதஇருக்கைகளைபயன்படுத்தலாம்என்று அறிவித்துள்ளது.

அதேபோல், கேளிக்கைவிடுதிகள், மதுபானவிடுதிகள், உணவகங்கள், சொகுசுவிடுதிகள், திருமணமண்டபங்கள் 100 சதவீதஇருக்கைகளுடன்இயங்கஅனுமதிக்கப்படுகிறது. பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்புவரைவகுப்புகளில் 100 சதவீதகுழந்தைகளைஅமரவைக்கலாம்என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்,  1 சதவீதத்துக்கும்அதிகமாகஇருக்கும்மாவட்டங்களில் 50 சதவீதஇருக்கைக்குமட்டுமேஅனுமதிஅளிக்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.