நடுவழியில் திரும்பிய பிரணாப் - விமானத்தில் கோளாறு... மீண்டும் வருவாரா?
ஜனாதிபதி சென்னைக்கு வருவது திடீர் நிறுத்தம் & விமானம் கோளாறு ஏற்பட்டதால் டெல்லி சென்றார் பிரணாப்
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்களும், நடிகர்களும், முக்கிய பிரமுகர்களும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜ், மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறிது நேரததுக்கு முன் சென்னைக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
ஆனால், அவர் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார். இதையொட்டி அவர் சென்னைக்கு வரும் நேரம் குறிப்பிடவில்லை.