Asianet News TamilAsianet News Tamil

காஷ்மீரில் நேருவின் பங்கு என்ன ? பாஜக Vs காங்கிரஸ்.. ட்விட்டரில் அனல் பறந்த மோதல்.!

பிரதமர் நரேந்திர மோடி, ஜவஹர்லால் நேருவை சாடுவதற்காக, உண்மை வரலாற்றை வெள்ளையடித்து, உண்மைகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சட்ட அமைச்சர் ரிஜிஜு இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Jawaharlal Nehru role in Kashmir BJP vs Congress spar over Twitter
Author
First Published Oct 12, 2022, 8:31 PM IST

காஷ்மீர் சர்ச்சை :

காஷ்மீர் பிரச்சனையில் ஜவஹர்லால் நேருவின் பங்கு குறித்து காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் சமூக ஊடகங்களில் சரமாரியாக வாக்குவாதம் செய்து வருகிறார்கள். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘வரலாற்று ரீதியாக’ காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி உண்மையான வரலாற்றை வெள்ளையடிப்பதாகவும், நேருவை அவதூறாக உண்மைகளை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினார் ஜெய்ராம் ரமேஷ். மேலும், மகாராஜா ஹரி சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிக்கும் வரை இந்தியாவுக்குள் நுழைவதில் தயக்கம் காட்டினார். ராஜ்மோகன் காந்தியின் சர்தார் படேலின் வாழ்க்கை வரலாற்றை மேற்கோள் காட்டி, ஜெய்ராம் ரமேஷ், நேருவுடனான நட்பு மற்றும் மகாத்மா காந்தியின் மீதான மரியாதை காரணமாக ஷேக் முகமது அப்துல்லா இந்தியாவுக்குள் நுழைய விரும்பினார் என்று கூறினார்.

Jawaharlal Nehru role in Kashmir BJP vs Congress spar over Twitter

இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

காங்கிரஸ் Vs பாஜக :

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஒருங்கிணைத்ததில் படேலின் பங்கை பிரதமர் மோடி பாராட்டியதற்கும், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைகளுக்கு நேருவைக் குற்றம்சாட்டியதற்கும் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தரப்பு கடுமையாக குற்றஞ்சாட்டினார்கள்.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ஆனந்த் நகரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘அனைத்து சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் வெற்றிகரமாக இணைத்ததற்காக பட்டேலைப் பாராட்டினார்.  நேருவை நேரடியாகப் பெயரிடாமல், காஷ்மீரை தீர்க்க முடியாமல் போனதற்கு 'ஒருவரை' குற்றம் சாட்டினார். இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ரிஜிஜு பதிலடி :

ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பிரதமரை கடுமையாக விமர்சித்ததை கண்டித்து, மத்திய சட்டதுறை அமைச்சர் ரிஜிஜு பதிலடி கொடுத்திருக்கிறார். நேருவின் உரையை மேற்கோள் காட்டிய ரிஜிஜு, ஷேக் அப்துல்லாவுடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஜூலை 24, 1952 ஆம் ஆண்டு மக்களவையில் தனது உரையில், சுதந்திரத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மகாராஜா ஹரி சிங் தன்னை இந்தியாவுடன் சேர அணுகியதாக ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?

நேரு உரையில், 'காஷ்மீர் - ஒரு சிறப்பு வழக்கு என்பதால், அங்கு அவசரமாக விஷயங்களைச் செய்ய முயற்சிப்பது முறையானது அல்ல, மேலும் மாநில மக்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று நாங்கள் வகுத்துள்ள பொதுவான கொள்கை' என்று நேரு கூறுகிறார். இந்த விஷயத்தை அவசரப்பட வேண்டாம் என்றும், மக்களிடம் கருத்து கேட்பதற்கு ஏதாவது ஒரு வழி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

நாங்கள் மகாராஜாவின் அரசாங்கத்திடமும், அங்குள்ள மக்கள் இயக்கத்தின் தலைவர்களிடமும் தெரிவித்தோம்,' என்று நேரு கூறினார். இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்துக் கொள்ள 1947ஆம் ஆஆண்டில் மகாராஜா ஹரி சிங் விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால், நேருதான் இணைப்பை தாமதம் செய்தார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய் ரமேஷ்க்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

Follow Us:
Download App:
  • android
  • ios