ஐஎன்எல்டி ஹரியானா பிரிவுத் தலைவர் நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இந்திய தேசிய லோக்தளத்தின் ஹரியானா மாநிலப் பிரிவுத் தலைவர் நஃபே சிங் ரதீ ஜஜ்ஜார் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஜஜ்ஜாரின் பஹதுர்கர் நகரில், முன்னாள் எம்.எல்.ஏ நஃபே சிங் ரதீ பயணம் செய்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள், அவர்களின் எஸ்யூவி மீது தோட்டாக்களை வீசினர் என்றும் கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்ட மூன்று தனியார் துப்பாக்கிதாரிகளும் தாக்குதலில் காயமடைந்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. ஐஎன்எல்டி தலைவர் அபய் சௌதாலா, ரதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், மாநில அரசு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்.

இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்த எங்கள் மாநிலப் பிரிவுத் தலைவராக இருந்த அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநில உள்துறை அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்று சவுதாலா கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இந்த தாக்குதல், பாஜக ஆளும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, முன்னாள் எம்.எல்.ஏ.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார். 

இதற்கிடையில், ஐஎன்எல்டி தலைவர் அனுமதிக்கப்பட்டுள்ள பிரம்ம சக்தி சஞ்சீவனி மருத்துவமனையின் டாக்டர் மணீஷ் சர்மா, முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவரது கட்சித் தொண்டர் ஒருவர் இறந்ததாகவும், மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?