case in sc
நாடு முழுவதும் இந்தியை 8-ம் வகுப்பு வரையில் கட்டாய பாடமாக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அஸ்வினிகுமார் உபாத்தியாயா இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார் உள்ளார்.
நீதித்துறையில் இருப்பவர்கள்கூட பெரிய அளவில் மொழிப் பிரச்சினையை சந்திக்கின்றனர், இந்தியை கட்டாய பாடமாக்குவதுதான் மொழிப் பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தி மொழியை பயில்வது விருப்பத்திற்கு ஏற்றது என்பது சரியானதாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இந்தியை 8-ம் வகுப்பு வரையில் கட்டாய பாடமாக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வவ்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாடு முழுவதும் இந்த கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை.
இருப்பினும், இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியை ஒரு அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, தேசிய மொழியாக அல்ல என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றம்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கையின் அம்சங்களை சுட்டிக் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. டெல்லி செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யாயா, “மும்மொழி கொள்கையின்படி, இந்தி பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி கற்பிக்க வேண்டும். அதேபோல், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி கற்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
