Asianet News TamilAsianet News Tamil

உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜெகதிஸ் சிங் கேஹர்​பதவி ஏற்க வாய்ப்பு!

high court-judge
Author
First Published Dec 7, 2016, 4:02 PM IST


உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக திரு. Jagdish Singh Khehar நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் திரு.TS Thakur-ன் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக திரு. Jagdish Singh Khehar-ரை நியமனம் செய்ய கோரி தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். 

நீதிபதி Khehar-க்கு வரும் ஜனவரி 4-ம் தேதி, குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக Khehar பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios