விமான படை ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது! 5 பேர் பலி
அருணாச்சலபிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்திய விமான படைக்குச் சொந்தமான Mi-17 V5 ஹெலிகாப்டர், இன்று அதிகாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அருணாச்சல பிரதேசம், டாவாங் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
Mi-17 V5 ரக ஹெலிகாப்டர், இந்திய விமானப் படையின் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, இந்திய விமான படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.