குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.  25 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

குஜராத்தில் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- பாகிஸ்தானில் பெண் கொடூர கொலை.. இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - பரபரப்பு சம்பவம்

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- நவ்சாரியில் சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- லீவில் இருக்கும் ஊழியரை தொந்தரவு செய்யக்கூடாது.. மீறினால் 1 லட்சம் அபராதம் - ட்ரீம் 11 நிறுவனம் அதிரடி