ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 6 பேர் பலி
மஹாராஷ்ட்டிர மாநிலம் Gondia நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 6 பேர் உடல் கருகி பலியாகினர்.
Gondia நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து நேரிட்டது. அப்போது, உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த பலர் அலறியடித்து வெளியே ஓடினர்.
இருப்பினும், 6 பேர் பலத்த தீக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும், 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக இவ்விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.