Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசின் விவசாய சட்டங்களால் பயனடைவோம்... ராஜஸ்தான் - மத்தியப்பிரதேசத்தில் இருந்து கிளம்பிய ஆதரவு..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தால் குறைந்த செலவில் அதிக விலையைப் பெறுவதாகவும் கூறி ஆதரவு தெரிவித்துள்ளனர். 

Farmers from Rajasthan and Madhya Pradesh extend their support to new farm laws
Author
Tamil Nadu, First Published Dec 9, 2020, 4:51 PM IST

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தால் குறைந்த செலவில் அதிக விலையைப் பெறுவதாகவும் கூறி ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி மாநில எல்லைப் பகுதிகளில் பல்லாயிரம் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2020 செப்டம்பரில் மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய விவசாய சட்டங்களால் பயனடைந்துள்ளோம் எனக்கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். Farmers from Rajasthan and Madhya Pradesh extend their support to new farm laws

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சட்டங்களால் பயனடைந்த ஒரு விவசாயி இதுகுறித்து கூறுகையில், ’எனது விவசாய விளைபொருட்களை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2500- க்கு விற்றுள்ளேன். பயிரின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .1800 ஆக இருக்கிறது.  பிரீமியம் பெறுவதைத் தவிர, புதிய சட்டங்கள் எனக்கு நேரத்தை மிச்சப்படுதுகிறது. தானியங்கள் சேகரிக்க வணிகங்கள் எனது வயல்களுக்கு வந்ததால் எனது போக்குவரத்து செலவை மிச்சமாகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். Farmers from Rajasthan and Madhya Pradesh extend their support to new farm laws

மத்திய பிரதேசத்தில் உள்ள மற்றொரு விவசாயி கூறுகையில், ’இதற்கு முன்னர் மண்டிஸில் வர்த்தகம் விவசாய விளைபொருட்களின் விலையை தீர்மானிக்கும். ஒரு சில செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் மட்டுமே விவசாய பொருட்களின் விலையை நிர்ணயிப்பார்கள். மூன்று சட்டங்கள் இயற்றப்படுவதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக வணிகர்களுக்கு தங்களுக்கு விருப்பமான விலையில் விற்க முடியும்.

முன்பு மண்டிஸில், 10 கிலோ தானியங்கள் மாதிரி நோக்கங்களுக்காக மட்டுமே அனுப்பப்பட்டன. எங்கள் சாகுபடிகளை விற்க மண்டிஸில் நிறைய நேரம் செலவானது. போக்குவரத்து மற்றும் ஏற்றுதல், இறக்குதல் கட்டணங்களை நாங்களே ஏற்க வேண்டியிருந்தது. எங்கள் விவசாய விளைபொருட்களுக்கான தொகையைப் பெறுவதற்கு நாங்கள் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு மேல்கூட ஆகலாம். ஆனால் விவசாய, சட்டங்கள் இயற்றப்படுவதால், வணிகர்கள் எங்கள் பண்ணைக்கு வந்து எங்களின் சாகுபடி பயிர்களுக்கு முன்பணம் செலுத்துகிறார்கள். எம்.எஸ்.பி-யில் பிரீமியம் பெறுவது மட்டுமல்லாமல், எங்கள் போக்குவரத்து செலவும் நேரமும் மிச்சப்படுத்தப்படுகிறது, ”என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். Farmers from Rajasthan and Madhya Pradesh extend their support to new farm laws

உண்மையான விவசாயிகள் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கார்ப்பரேட் கைக்கூலிகளே இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios