மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பலில் கப்பல் படையினர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்தக் கப்பலின் உள் பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


இதையடுத்து உடனடியாக ரன்வீர் கப்பலின் உள் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த கப்பல் இந்திய கப்பல் படையின் முக்கிய கப்பல்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்பு நடவடிக்கை ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.