சுஷ்மா ஸ்வராஜ் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய மோடி...!
ஜந்தர் மந்தரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சுஷ்மாவின் கணவர் கவுசல், மகள் பாசுரிக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உடல்நிலையை கருத்தில் கொண்டு சுஷ்மா சுவராஜ் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின் போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பெருந்தன்மையாக கூறிவிட்டு அரசியலில் ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், இன்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடல் ஜந்தர் மந்தரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்திய வரலாற்றில் ஓர் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஏழை மக்களின் நலனுக்காகவும், பொது வாழ்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தலைவரின் மறைவால் நாடே துயரத்தில் உள்ளது. தனது அன்பினால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சுஷ்மாவின் கணவர் கவுசல், மகள் பாசுரிக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் முக்காள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.