நேபாளத்தின் காட்மாண்டுவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

நேபாளத்தின் காட்மாண்டுவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நேபாளத்தின் காட்மாண்டுவில் இருந்து 9.19க்கு துபாய்க்கு புறப்பட்ட விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து விமானம் காட்மாண்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான இயந்திரத்தில் தீப்பற்றியதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்ட பின் தீ கட்டுக்குள்வந்ததாக காட்மாண்டு விமான கட்டுப்பாட்டுஅறைக்கு விமானி தகவல் அளித்தார். இதை அடுத்து சரிசெய்யப்பட விமானம் தற்போது துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred