குலாப் ப்யல் கரையை கடந்தபோது கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

குலாப் ப்யல் கரையை கடந்தபோது கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குலாப் புயல் வானிலை மையம் கணித்தபடி நேற்று மாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

சூறைக்காற்றோடு கனமழையும் கொட்டியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. , ஆந்திரமீனவா்கள்சென்றபடகுகவிழ்ந்துஅதிலிருந்த 6 மீனவா்கள்கடலில்விழுந்தனா். அவா்களில் 3 போ்மீட்கப்பட்டனா். இரண்டுபேர்உயிரிழந்ததாகக்கூறப்படுகிறது.

வடக்கு ஆந்திராவில் கரையக் கடந்த குலாப் புயல், ஒடிசாவின்கோராபுட்மாவட்டகடல்பகுதிக்குள்நுழைந்து, ஆழ்ந்தகாற்றழுத்தத்தாழ்வுமண்டலமாகவலுவிழக்கும்எனஇந்தியவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது. இதன்காரணமாககோராபுட், ராயகடா, கஜபதிமாவட்டங்களில்கனமழைபெய்யும்எனஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. குலாப் புயலின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.