Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவை அலறவிடும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சத்தில் பாதிப்பு.. 10,000 நெருங்கும் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சமாக அதிகரித்துள்ளது.

Coronavirus cases.. highest daily count
Author
Maharashtra, First Published Jun 14, 2020, 12:24 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,62,379 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 

Coronavirus cases.. highest daily count

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,195 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Coronavirus cases.. highest daily count

மகாராஷ்டிராவில் இதுவரை 1,04,568 பாதிக்கப்பட்டுள்ளனர். 3,830 பேர் உயிரிழந்துள்ளனர். 42,687 பாதிப்பு மற்றும் 397 பேர்உயிரிழப்புடன் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி 38,958 பாதிப்பு மற்றும்  1,271 உயிரிழப்புடன் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. உலகளவில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios