இந்தியாவில் 400ஐ நெருங்கிய கொரோனா பலி.. மாநில வாரியாக பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கைன் 392ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைவுதான்.
இந்தியாவில் கொரோனாவை தடுக்க, மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,555ஆக உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை 377லிருந்து 392ஆக அதிகரித்திருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2801 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கொரோனா பாதிப்பு, தமிழ்நாட்டில் நேற்று வெகுவாக குறைந்துள்ளது. நேற்று வெறும் 31 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1204ஆக உள்ளது. டெல்லியில் 1561பேரும் ராஜஸ்தானில் 1304 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரண்டாமிடத்தில் இருந்த தமிழ்நாடு, கொரோனா பாதிப்பில் மெதுமெதுவாக நான்காமிடத்திற்கு வந்துவிட்டது.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
மகாராஷ்டிரா - 2801
டெல்லி - 1561
ராஜஸ்தான் - 1304
தமிழ்நாடு - 1204
மத்திய பிரதேசம் - 730
உத்தர பிரதேசம் - 660
குஜராத் - 650
தெலுங்கானா - 624
ஆந்திரா - 483
கேரளா - 387
ஜம்மு காஷ்மீர் - 278
கர்நாடகா - 260
மேற்கு வங்கம் - 213
ஹரியானா - 199
பஞ்சாப் - 184
பீஹார் - 66
ஒடிசா - 60
உத்தரகண்ட் - 37
சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் - 33
அசாம் - 32
ஜார்கண்ட் - 27
சண்டிகர் - 21
லடாக் - 17
அந்தமான் நிகோபார் - 11
புதுச்சேரி, கோவா - 7
மணிப்பூர், திரிபுரா - 2.