Asianet News TamilAsianet News Tamil

அதிகரிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 19,893 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 53 பேர் பலி..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

Corona case today - 19,893 corona case positive last 24 hrs
Author
India, First Published Aug 4, 2022, 10:37 AM IST

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்19,893 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம்13,734 ஆகவும் நேற்று17,135  ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று19,893ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,40,87,037 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:சற்று அதிகரித்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 17,135 பாதிப்பு.. 47 பேர் பலி..

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 20,419 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  4,34,24,029 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,36,478 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தமிழகத்தில் 1,359 பேருக்கு கொரோனா… சென்னையில் 309 பேருக்கு தொற்று!!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,530  ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.19 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 % ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 205.22 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 38,20,676 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios