உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு மின்சார பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகையும், ஒவ்வொரு சனிக்கிழமையும் பாரம்பரியப் பாதையில் இலவசப் பயணமும் அறிவித்துள்ளார்.

லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலப் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளார். அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு அடுக்கு மின்சார பேருந்துகளில் பெண்கள் பாதி விலையில் பயணிக்க வழிவகை செய்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இரண்டு அடுக்கு மின்சார பேருந்து சேவையை முதல்வர் யோகி தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு டிக்கெட்டுகளில் 50 சதவீதத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரங்கமே கரகோஷத்தில் மூழ்கியது. மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் பாரம்பரியப் பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியும் அளிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.