Asianet News TamilAsianet News Tamil

திடீரென நிறுத்தப்பட்ட சந்திரயான் பயணம்…. கடைசி நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி !!

இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் - 2 கவுண்ட்டவுன் திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் சந்திரயான் 2 விண்கலத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

chandrayan 2 stop
Author
Sriharikota, First Published Jul 15, 2019, 8:15 AM IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம்,  இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது.   இதற்கான  20 மணி நேர கவுண்ட்டவுன்  நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் - 2 கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. 

சந்திரயான் 2 ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 54 நொடிகள் இருக்கும்போது நிறுத்தப்பட்டது

தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  பாகுபலி ஏவுகணை என்றழைக்கப்படும் மார்க் -3 ஏவுகணை மூலம் சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது. 

chandrayan 2 stop

நிலவின் தென் பகுதியை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது.  தற்போது ஒரு மாதத்துக்குப் பின்பே சந்திரயான் -2 ஏவப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

chandrayan 2 stop

ராக்கெட் ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரயான் -2 விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏவுகணை ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கையில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios