Goldy Brar : கனடா நாட்டை சேர்ந்த கோல்டி பிராரை என்ற நபரை, பயங்கரவாதியாக இந்திய உள்துறை அமைச்சகம் இன்று திங்கள்கிழமை அன்று அறிவித்துள்ளது. பிரபல பஞ்சாப் நகர பாடகர் ஒருவர் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

கனடாவைச் சேர்ந்த சத்விந்தர் சிங் என்ற சதீந்தர்ஜித் சிங் என்கிற கோல்டி பிராரை, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் பயங்கரவாதியாக இந்திய உள்துறை அமைச்சகம் இன்று ஜனவரி 1ம் தேதி திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஷம்ஷேர் சிங் மற்றும் ப்ரீத்பால் கவுரின் மகனான கோல்டி ப்ரார், பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் நகரில் உள்ள ஆதேஷ் நகரில் தான் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது வெளியான அறிக்கையின்படி, பிரார் தற்போது கனடாவின் பிராம்ப்டனில் வசிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பாபர் கல்சா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளார். MHAன் அளித்த தகவலின்படி, "இந்தச் சட்டத்தின் முதல் அட்டவணையின் எண் I-ன் படி" பாபர் கல்சா இன்டர்நேஷனல் ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ரார் எல்லை தாண்டிய ஏஜென்சியால் ஆதரிக்கப்பட்டார் மற்றும் பல கொலைகள் மற்றும் எல்லையில் ட்ரோன்கள் மூலம் உயர்தர ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் வெடிக்கும் பொருட்களை கடத்துவதில் ஈடுபட்டார் என்றும் MHA மேலும் கூறியது. முன்னதாக சனிக்கிழமையன்று, உள்துறை அமைச்சகம், கனடாவைச் சேர்ந்த பாபர் கல்சாவின் லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்ததாக செய்தி வெளியானது, 34 வயதான அவர் பாபர் கல்சா இன்டர்நேஷனலுடன் தொடர்புடையவர் ஆவார்.

"இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எல்லைக்கு அப்பால் இருந்து பல்வேறு இடங்களுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் (IED), ஆயுதங்கள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதில் அவர் ஈடுபட்டுள்ளார்" என்று MHA அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலையில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் தேடப்படும் குற்றவாளியாக கோல்டி ப்ரார் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவர் இப்பொது பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.