central govt planning to close worst universities
மோசமாக செயல்படும் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களின் கல்வி புகட்டும் திறனை வளர்த்துக்கொள்ளத் தவறினால், அதை மூடவோ அல்லது சிறப்பாகச் செயல்படும் மற்ற கல்வி நிறுவனங்களோடு இணைக்கவோ அரசு திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட்டில் சீர்திருத்தம்
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதில் யு.ஜி.சி. உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்கான சீர்திருத்தங்களைவௌியிட்டதில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
3 பிரிவு
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான சீர்திருத்த திட்டங்களை பல்கலைக்கழக மானிய குழு(யு.ஜி.சி.) செயல்படுத்த தயாராகி வருகிறது. இதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழங்களையும் தனிக்கை முறை செய்ய திட்டமிடப்பட்டு, செயல்பாட்டு திறன் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளன.
முதல்பிரிவு
அதாவது, ‘மிகச்சிறப்பாக செயல்பாடு’, ‘வளர்சிக்கு வாய்ப்பு’ மற்றும் ‘மோசமான செயல்பாடு’ ஆகிய 3 பிரிவுகளாக பிரிக்கப்பட இருக்கிறது. மிகச்சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம், மானியங்கள், நிதிகள் ஒதுக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படும்.
2-ம் இடத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களின் குறைகளை சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ளச் செய்வது.
எச்சரிக்கை
3-வது பிரிவில் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களை கண்டுபிடித்து, அவற்றின் கல்வி கற்பிக்கும் திறன், செயல்பாட்டு திறனை மேம்படுத்திக்கொள்ள காலம் கொடுப்பது. அதை தவறவிட்டால், சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழங்கள், கல்லூரிகளுடன் அவற்றை இணைத்து விடுவது. அல்லது மூட உத்தரவிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
