Asianet News TamilAsianet News Tamil

இனி சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படிக்கலாம்.. வெளியான புதிய அறிவிப்பு..

பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வழியில் பயிற்றுவிக்க சிபிஎஸ்இ அனுமதி வழங்கி உள்ளது.

cbse allows to schools to use indian languages as medium of instruction
Author
First Published Jul 22, 2023, 12:44 PM IST

நாட்டில் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி வழியில் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. அதாவது இங்கிலீஷ் அல்லது ஹிந்தி மீடியம் பள்ளிகளாக உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளின் வழியில் பயிற்றுவிக்க சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) க்கு ஏற்ப கல்வி முறையை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கொள்கை, மாணவர்களுக்கு பன்மொழியின் குறிப்பிடத்தக்க அறிவாற்றல் நன்மைகளை வலியுறுத்துகிறது, மேலும் மாணவர்களின் தாய்மொழியில் குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது.

CBSE இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ இளம் மாணவர்களுக்கான பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும் அறிவாற்றல் நன்மைகளையும் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. தொடக்க வகுப்புகள் முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் மாற்று வழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவது வலியுறுத்தப்பட்டுள்ளது. பன்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதும், தாய்மொழியைப் பயிற்றுவிப்பதும், பன்மொழி அமைப்புகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்களின் இருப்பு, உயர்தர பன்மொழிப் பாடப்புத்தகங்களை உருவாக்குதல், குறிப்பாக இரு ஷிப்ட் அரசுப் பள்ளிகளில், கிடைக்கக்கூடிய குறைந்த நேரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை முன்வைக்கிறது.” என்று தெரிவித்துள்ளது. 

இதனிடையே தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப்புத்தகங்களைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சகம் NCERT-க்கு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் 22 பட்டியலிடப்பட்ட மொழிகளில் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் NCERT பணியை அதிக முன்னுரிமைக்கு எடுத்துள்ளது. இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களைத் தயாரிக்கவும், ஆங்கிலம் தவிர இந்த மொழிகளின் மூலம் கற்றல்-கற்பித்தல் செயல்முறையைத் தொடங்கவும் தயாராகி வருகிறது. மேலும், இந்திய மொழிகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யும். அதேபோல், தொழில்நுட்பம், மருத்துவம், தொழில் திறன், சட்டம் போன்றவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும் இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. எனவே வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தமிழ் வழியில் கற்க முடியும். 

‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு விழா: 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி

Follow Us:
Download App:
  • android
  • ios