200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 12 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!
இமாச்சல பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சல் பிரதேச மாநிலத்தின் தல்ஹவுசி பகுதியில் இருந்து பஞ்சாப்பின் பதான்கோட் பகுதிக்கு தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்றிக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தத. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 12 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.