காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – எல்லை பாதுகாப்பு வீரர் காயம்
காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டாவின் எல்லை பாதுகாப்பு வீரர்கள் சென்ற கான்வாய் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில, எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம் நக்ரோட்டாவின் பகுதியில் எல்லை பாதுகாப்புபடை வீர்ர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் சென்ற கான்வாய் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் காயமடைந்தார்.
இதை கண்டு சுதாரித்து கொண்ட மற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இத்தொடர்ந்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.